அவன் அவளுக்கு அந்நியமானான்
அருகில் இருந்தும்
ஒரே உணவை பரிமாறிக்கொண்டும்
முத்தமிட்டும் கட்டியணைத்தும்
இறுக்கமாய் இடையில் நெஞ்சுக்கூட்டில் முகம் புதைத்துக்கொண்டும்
பிரியாமல் எப்போதுமே சேர்ந்திருந்ததாய்
இருகைகளை கோர்த்துக்கொண்டும்
ஒட்டி உறவாடி தொட்டு துகில் நீக்கி
துயில் கலைத்து தீர்க்கமாய் பேசி
நெருக்கமாய் நடந்தபோதிலும்
அவன் அவளுக்கு அந்நியமானான்
காதல் என்பதை இப்போது தேடிக்கொள்ளும்
தம்பதிகளுள் ஒருவராய்
இந்தக்காதல் ஜோடி மாறிவிட்டது
திருமணம் என்பது பலருக்கு ஆசீர்வாதம்
சிலருக்கு வெறும் வாதம்
அந்த சிலருள் ஒருவராய் அவர்களை மாற்றிய
காதல் இப்போது எங்கோயோ ஒழிந்து போய் விட்டது
காதல் என்பது அப்படித்தான்
காதலர்கள் சேர்ந்தபின்
அதுபாட்டில் எங்கேயோ தூரமாய் பிரிந்தே போய்விடுகிறது
அடுத்த காதலர்களை தேடி…
யாரோ ஒருவர் மீளவும் அதே சலிப்பற்ற வாக்குறுதிகளை
மூக்கு சிந்த அழுதபடி யார் காதிலோ இன்னமும்
முனுமுனுத்துக் கொண்டிருப்பார்கள் என அதற்குத் தெரியும்
இங்கே பதிவு செய்க
கருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் "Login" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.
0 கருத்துரைகள்
பழமையான