தித்திப்பு வேளையிலும்
திக் திக் நிமிடங்களிலும் என்னோடு அன்பாகவும் அரவணைப்பாகவும் உடனிருப்பவன் அவன்
என் அண்ணன்…..
என்னோடு கைகோர்த்து நெடு தூரம் பயனிக்க
அண்ணன் எனும் உறவுக்காய் ஏங்கும் சிறு குழந்தையாய்…..
உறவாய் நானும்
தாயாய் நீயும்
எனை உன் மடியினில் ஏந்திய காலம்
மறவா நினைவாய் என்னுள் உறங்கிட
அண்ணன் எனும் பந்தம்
தகப்பன் எனும் பந்தமாய் மாறிய தருனங்கள்…
நான் பிழை செய்யும் போது
உன் முகமதில் தோன்றும் கோவம்
அது என்னை திருத்திடும் ஆயுதம்
பாலைவனம் சுட்டிடுமாம்
அதனால் சம்பவங்கள் மாறிடுமாம்
மாறாத நினைவுகள்
நீ பிறந்த பொன்நாளே
தாய் செய்த சிற்பமொன்று
என் சகோதரன்
அவனோ இப்போது
தூளான சிலைபோல என்னோடில்லை ஓர் கானல் நீராய்
சிறு பிரிவுகளும் உயிர்
வாட்டுமென
அறிந்திருந்தால்
எப்போதோ உன் காலடியில்
சரணடைந்திருப்பேன்
தங்கை எனும் உறவினிலே