அகால மரண மடைந்த
ஒருவனின் அழுகுரல் கேட்கிறது
என் கனவில்
அவன் மூச்சி விட சிரமமாக
அவன் விம்பி விம்பி அழுதவனாக
கடலை நோக்கி
நடக்கிறான்
கால் ஈரம் அவனை கொஞ்சம்
சிரமப்படுத்துகிறது
இருந்தும்
அவன் ஓடிடவே நினைக்கிறான்
தன் கனவுகளை நசுக்கி விட்ட
சுயநல வாதிகள் சிரித்துக் கொண்டும்
தன் இளமையை சீரழித்து விட்ட
துரோகிகள் இன்னும் நடமாடிக் கொண்டும்
தன் அடையாளத்தை அகோர மரணமாகிட்ட
மனிதமும் இன்னும் வாழ்ந்து கொண்டும்
இருக்கும் இந்த உலகில்
அவன் கடலோடு சங்கமித்து
அந்த அலைகளை துரத்துகிறான்
மரணம் கடலோடு கலக்க விட்டது































Good. Be active on neermai. Write more!