என்னவள்

1
1045

 

 

 

இதயம் தொட்ட என்னவளே
உன் விழியில் எனை மறந்து போனேன் அறிவாயா?
என் உயிரில் கலந்தவளே
உன் அன்பினில் அடைக்கலமானேன்
என்னை ஏற்று கொள்ளடி
என் ஆயுள் முழுவதும் அர்ப்பணிக்கின்றேன்
எனக்கு துணையாய் வருவாயா? காதலி

உன் விரல் தீண்டி என் இதயம் துடிப்பதை உணருகிறேன்
என்னை புரிந்து கொள்ளடி
கனவிலும் தொடந்த என் கனவுக்கண்ணியே
உனக்காக காத்திருக்கும் என் இதயத்திற்கு
உன் நாமமே மந்திரம் ஆனதடி

நீ என நிலவிடம் கதை பேச
என் உறவுகள் என்னை பைத்தியம் என்றதடி
பாவிமகள் என் மகனை மந்திரித்து விட்டாள் என அம்மா புலம்ப
அவளே என் காதல் என்று நான் உலற
இந்த வாழ்கையில் சதிசெய்தது என்னவோ
காதல் தான் என்று நான் உணரந்தேனடி
என்னவளே…!

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
அழகராஜ் பிரசாந்
அழகராஜ் பிரசாந்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

உன்னவனின் உள்ளத்தை உய்த்துணரும் உண்மை கவி வரிகள்