29.2 C
Batticaloa
Sunday, September 13, 2026
முகப்பு போட்டிகள் கதை - ஜூன் 2020 கருவாக்கி உருவாக்கியவளுக்காய்….

கருவாக்கி உருவாக்கியவளுக்காய்….

0
1397

உயிரில் உயிராய் கலந்து
உன்னில் நான் வாழ்ந்த
உன்னத ஐயிரு மாதங்கள்
உண்மையில்  நான் செய்த தவம்
உந்தன் வேதனை அறியாமல்
உள்ளூர நான் பெற்ற இன்பம் பல


உலகின் வறுமை தெரியாமல்
உன் உதிரத்தை உணவாக்கி,
உன்னில் ஓர் சுமையாகி,
உலகினை காண வந்து,
உன் சுமை குறைத்து,
உலகச் சுமை அதிகரித்தேன்! 
ஆயினும்
உந்தன் மனமெனும் கோயிலில் என்றும்
உயரிய இடத்திலிருக்கும் அன்புச்சுமை யான்! 
உன்னதமாய் நான் செய்த தவம் தான்
உன்னை என் அன்னையாக்கியது
உன்னில் அனைத்தும் அடக்கம்
என்பதால்தான்(நான்உட்பட)   
உனக்குள் என் எண்ணம் சொன்னேன்.
உலகமதில் எந்த பிறப்பானாலும்
உந்தன் சிசுவாகவே பிறக்க வேண்டும்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks