துன்பத்தில் விட்டுப்போகா
என் இனிய துணைவன்….
இன்பத்தை இனிமையாய்
இரட்டித்து தித்திக்க
கண்ணாடி விம்பமாகி
கைகோர்த்து
அத்தனை தருணத்திலும்
தோள்கொடுக்கும் என்னவனே….
எண்ணத்தில் தோன்றும்
அத்தனையும் புரிந்து
ஆழ்மனதின் ஆசைகளை
அப்படியே உணர்ந்து…
அழகிய வரியாக உருவாகும்
என் காதலனே என் கவியே….
கவிதைக் காதலி நான்
முப்பொழுதும் பிரிந்திடாதே
மூச்சுடன் கலந்த என்னுயிரே!!
இங்கே பதிவு செய்க
கருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் "Login" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.
0 கருத்துரைகள்
பழமையான