விடியலை
வரவேற்க
வீட்டு முற்றத்தில்
அவள் இட்ட மாக்கோலம்
எறும்புகள் வந்து
உண்ண கண்டு
இன்முகம் புரிந்தவள்
வகை வகையாக
கோலமிட்டு
முற்றத்தையே அழகிட்டவள்
என் வாழ்விலும் அருகிலும்
அழியாத கோலமாய்
நெஞ்சோடு
கலந்தவள்
எண்ணத்தின்
உயிரோட்டமாய்
வாழ்க்கை
கோலம்
இறைவன் போட்ட
விதிக்கோடு






























