தாய்மை

0
936

ஒரு துளி உதிரத்தில்
உருவான கருவை
தன் உதரத்தில் சுமந்து
உணவூட்டி உயிர் காத்து
உயிரை பணயம் வைத்து
உலகிற்கு கொண்டு வந்து
பிரசவவலி மறுநொடியில் மறந்து
பரவசமாய் மார்போடணைத்து
உதிரத்தையே உணவாக்கி
ஊண் உறக்கம் துறந்து
உள்ளத்தின் ஆசைகளை
ஆழக் குழி வெட்டி புதைத்து
உனக்காக மட்டுமே வாழ்ந்து
உனை ஆளாக்கி உயர்த்திட்ட
உத்தமி அவள் தான் தாய்…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments