மூளையில் பரவிக் கிடந்த
பளுக்களை ஒதுக்கி
ஈர் கண்ணிமை மத்தியில்
புதியதோர் கற்பனை சூழ
உறவுகள் மறந்து
ஓர் உலகம் காணும்
அழகிய தேவதை
வைத்த பாதம் எங்கும்
நீண்டு வளர்ந்த
செடிகளின் பூக்கள்
தலை மேல் வளர்ந்து
தலை வணங்க
சேமித்த புன்னகையை
அதற்கனைத்துக்கும்
அர்ப்பணிக்க,
தொடர்ந்த பாத அடியுடன்
நீர்த்துகள் வந்து
கன்னத்தை முத்தமிட
திரும்பி பார்த்து
வியந்து நின்றேன்
வீழ்ச்சியடைந்த
நீரைக் கண்டு…
ஒருவாறு தப்பித்தவளாய்
மேலும் அடி வைக்க
வண்ணம் பரவிய பூச்சிக்கள்
பூவுடன் சேர்த்து
எனையும் வருட,
மட்டற்ற மகிழ்ச்சியில்
இதமான குளிர்காற்றுடன்
ஒருவாறு அமர்ந்து
எங்கோ பறப்பது போல்
உணர்ந்து இருக்கை நோக்க
மேகம் எனை எங்கே
கொண்டு செல்கிறது என
குழப்பத்துடன்,
அழகிய பூமியை
மெய் மறந்து ரசிக்க
திடீரென ஏதோ உணர்ந்து
கண் விழிக்கையில்
கண்ட காட்சி யாவும்
கனவு தான் என
உறுதிப்படுத்தலோடு
தொடர்ந்தேன் வழமை
வேலைகளை…






























