29.2 C
Batticaloa
Friday, March 20, 2026

வறுமை தாய்

1
2857
images

வறுமையின் உச்சத்தில் தொடங்கியது என் வாழ்க்கை
நடைவண்டியுடன் நடந்த மழலைகளின் மத்தியில்
எனக்கு உடுத்த உடையின்றி தவித்தாள் என் தாய்!

நெய் சோறு உணவு உண்டது இல்லை
ஆனால் என் தாயின்
நெல்லு சோறுக்கு நிகர் இல்லை

காலை வேளையில் நான் உண்ண
கலத்து மேட்டில் அவள் நெல் கிண்ட

இருவேளை நான் உணவு உண்ண
பல வேளை அவள் நீரை மட்டும் பருக

பஞ்சத்தின் உச்சிலும்
நெஞ்சம் கலங்காமல்

கரை சேர்த்தாள்
அன்னையே உன் அருமை நிகர் இல்லை
உன் பெருமை என் மனதில் மறைவதில்லை

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gobikrishna D
5 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அருமை…

error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
1
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks