குறிச்சொல்: neermai.com
என்னை காக்க வைக்காதே!
யாரின் வருகைக்காக
என்னைக் காக்க வைக்கிறாய்?
அடிக்கடி ஜன்னலை திறந்து
தென்றலைத் தேடுகிறாய்
தேடிக் கொண்டே கடைவிழியில்
கண்ணீர் ஒதுக்குகிறாய்
ஆனபோதும்
உனக்காக காத்துக்கிடக்கும் என்னை
உன் தேடலில் தொலைத்து விடுகிறாய்
ஒன்று என்னை எடுத்துக் குடித்து
முடித்து விடு
இல்லை கீழே தட்டிவிட்டு
உடைத்து விடு
இப்படி காக்க வைக்காதே!
இதழ்வரை...
உலகின் காரமான மிளகாய்கள்
காரசாரமான பச்சை மிளகாய் இல்லாமல் இந்திய சமையலே இல்லை எனலாம். இந்திய சமையலின் பிரத்யேக தன்மையே அதன் மசாலா சேர்த்தலில்தான் இருக்கிறது. குடைமிளகாய், பஜ்ஜி மிளகாய், வற்றல் மிளகாய், பச்சை மிளகாய் என...
பணம் மட்டும் போதுமா?
வறுமைக்காலம் வந்தபோது purse இல் காசு தீர்ந்து போகும் வந்த அன்பும் தூர்ந்து போகும் சொந்தபந்தம் தூரப்போகும்
கோடிக்காசில் கோட்டை கட்டிபடம் போட்ட மனிதரெல்லாம் வாடகைக்காணி தேடி நாட்கணக்கில் அலைவதுண்டு கொட்டில் கட்டி குடியிருக்க...
அப்பன்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33
தாயகம் திரும்பினேன்
டிசம்பர் எட்டாம் தேதி காலை மிகுந்த உற்சாகத்துடன் இருந்தேன். அதிகாலை நல்ல குளிர் இருந்தது. சுடுநீரில் குளித்து தயாராகி ஏழு மணிக்கு முன்பே விடுதியின் வரவேற்பறைக்கு வந்துவிட்டேன். பாக்தாத்தின் விடுதியறையில் இருந்த எழு நாட்களும் சற்று சிரமமாகவே இருந்தது. பாக்தாத்தில் விமானம் பிடித்து அம்மான் வழியாக மும்பைக்குச் செல்ல, எனக்கு மதியம் மூன்று மணிக்கு விமானம். விமானச் சீட்டும் , கடவுச்சீட்டும் தந்து அனைவரின் ஆவணங்களும் சரிபார்த்தபின் ஒன்பது மணிக்கு மேல் எங்களை அழைத்துச் சென்றனர்.
என்னுடன் செல்வராஜ், இரு வெளிநாட்டினர் உட்பட ஆறு பேர் ஊருக்குச் செல்லத் தயாரானோம். எங்களை பாக்தாத் பன்னாட்டு விமான நிலையம் அழைத்துச்செல்ல பாதுகாப்பு வீரர்கள் சிறிய கார்களில் வந்திருந்தனர். மூன்று கார்களில் இருவர் வீதம் ஏறிக்கொண்டோம். பாதுகாப்புவீரர்களும், வாகன ஓட்டுனரும் தாடி வளர்த்து, அரபிகளை போன்ற உடையணிந்து மாறு வேஷத்தில் இருந்தனர். பாதுகாப்புக்காக வெள்ளைக்கார வீரர்களின் யுக்தி அது.
காரில் ஏறும் முன் பாதுகாப்பு விசயங்களை எங்களுக்கு விரிவாக விளக்கினர். முன்பு நான் திக்ரித்-பாக்தாத் பயணத்தில் உள்ளதை போன்றே, பாதுகாப்பு வீரரின் அனுமதியின்றி, காரில் இருந்து கீழே இறங்கக் கூடாது. அவ்வாறு இறங்கவேண்டிய...
கொரோனா கால டாக்குத்தர்மார்(பொழுது போக்கு)
#கொரோனா டாக்குத்தர்மார் (பொழுதுபோக்குக்கு மட்டும்)
இப்ப உலகம்பூரா கொரோனா பீதியில நடுங்கிட்டு இருக்கு. இங்கயும் வீட்டுக்க இருத்திப் போட்டாங்கள். பொழுதுபோக்குக்கு இந்தப் phoneஅ நோண்டிட்டு இருந்தன். எந்த நேரமும் உத நோண்டிக் கொண்டிருந்தா கொரோனா...
ஆகாயத்தாமரை
ஆகாயத்தாமரை (floating water hyacinth lilac devil) அல்லது வெங்காயத்தாமரை, என்பது Eichhornia crassipes என்னும் தாவரவியல்பெயர் கொண்ட பான்டிடெரியேசி (Pontederiaceae) குடும்பத்தைச்சேர்ந்த ஒரு மிதக்கும் நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். மூன்று அடி...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32
பாக்தாத் விடுதியில் ஏழு நாட்கள்
எப்போது நான் இந்தியா செல்வேன் என்ற எந்தத் தகவலுமின்றி பாக்தாத்தின் விடுதியறையில் இருந்தேன். இங்கு வந்த மறுநாள் மாலையில் இந்திய இளைஞர்கள் நிறையப்பேர் வந்தனர். புதிதாக பணிக்குத் தேர்வாகி வந்தவர்கள் அனைவரும் நான் பணிபுரியும் நிறுவனத்திற்காக...
ஜின்கோ மரம் – Ginkgo Biloba
உணவு உடை இருப்பிடம் மட்டுமல்லாமல் மருந்துகளுக்காவும் தாவரங்களின் தேவை அதிகமாகிவிட்ட தற்போதைய சூழலில் Geriatrics எனப்படும் முதியோர் மருத்துவத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் மருந்துகள் ’ஜின்கோபைலோபா’ (Ginkgo biloba) என்னும் மரத்திலிருந்து பெறப்படுகின்றது....
நான் கோபமா இருக்கேன்
நம்முடைய கோபத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறோம்? ஒரு நிமிஷம் சிந்திச்சுப் பார்த்தா பொதுவாக நம்மில் பலர் ஹை வால்யூமில் கத்திப் பேசுவதைச் சொல்வோம். ஆம் நம் குரலை யாரும் கேட்காத போதும் நம் கருத்தினை...
அண்ணை
“அம்மா அம்மா,
செக்கிங்ஆம், ஆமி வாறாங்களாம், சனமெல்லாம் வீடுகளுக்கு ஓடுது”.
படலையடியில இருந்து செழியன் ஓடிவந்தான், மரக்கறி வெட்டிக்கொண்டிருந்த தாய் துடிச்சு பதைச்சு எழும்பி,
“அக்கா எங்கையடா, அவங்கள் வரேக்க எல்லாரும் ஒரு இடத்தில நிப்பம்”
“அக்கா பின்னுக்கு...