என் 
ஒட்டு மொத்த கற்பனைகளின்
தலைகீழ்ப் படுத்தல்களாய்
நான் 
தரிசித்த அனுபவங்களில்
உன் நேசமும் ஒன்று
அர்த்தமில்லா
கண்ணீர்த் துளிகள்
காரணமில்லா
புன்னகைகள்
இடைவெளி இல்லா
பேச்சுக்களில் 
இடையில் வரும்
செல்லச் சண்டைகள்
இறுதியில்
சமாதானம் செய்யும் நீ
சிரித்துக் கொண்டே
உன்
கோபம் சீண்டும் நான்
இரவைப் போலவே
நீளும் 
நம் காதல்..
உணர்வுகள்
ஒதுக்கி விட்டு 
என் துன்பங்களின் போது
தலை கோதும்
உன்
பல நேரத் தோழமை
எப்போதும்
என் குழந்தையாய் நீ
உன்
அன்னையாய் நான்
ஆனாலும்
எப்போதும் நினைவிலிருக்கும்
என் பெயரைப் போலவே
என்னோடு
கலந்திட்ட பிரியா
சேர்க்கையாய்
உன் நினைவுகள்
இனியும்
என்ன சொல்ல
இதயமென்றா
அதில்
உள்ளூறும் துடிப்பென்றா
வேண்டாம்
வார்த்தைகளின் ஜோடனைகளில்
வாழ்வதில்லை காதல்
இருந்தும்
சுருங்கச் சொல்கிறேன்
என் மேல் நீயும்
உன் மேல் நானும்
கொண்டிருக்கும் ப்ரியங்கள்
என் கணவா,
இன்னும்
வரிக்கு வரா நல்
கவிதை போன்றது…….
                             Subscribe
                            
                        
                                            Please login to comment
                                
                        0  கருத்துரைகள்                    
                                        
                    
                                                                        Oldest
                                                                        
                                
                            
                                                 
			 
		






