29.2 C
Batticaloa
Friday, February 13, 2026
முகப்பு போட்டிகள் கவிதை ஜுலை - 2020 யாசிக்கும் புண்ணியங்கள்

யாசிக்கும் புண்ணியங்கள்

0
766
31ec2cfcadc6db75696893315fda4009

 

 

 

 

தூரல்
இல்லாப் பூமியில்
பழுத்துக்குலுங்கும்
மரத்துப்போன
மனிதம்

நா வறண்டு
தாகமெடுக்கையில்
சொட்டுநீர்
தந்து மகிழா
தரிசான மனங்கள்

முகம் கோணி
முறுவல் செய்து
சாடைகள் பேசும்
ஆறறிவில்
ஓரறிவு குறைந்த
மனிதர்கள்

உள்ளத்து குறுக்கத்தில்
உறவோடு பகை வளர்க்கும்
வற்றிப்போன ஈரத்தின்
அடையாளங்கள்

சிந்தை பிறண்டு
தன்னலம் கொண்டு
பொருள்சேர்க்கும் போட்டியில்
கருமியாய் வாழும்
தற்குறிகள்….

தரணியின் நலன்மறந்து
கருணையின் அளவுகோலை
உடைத்தெறிந்த
ஊன உள்ளங்கள்

வறுமை தேவதைக்கு
வண்ணம் தீட்டும்
வெறுங்கை வேந்தர்கள்
நாங்கள்….

ஈதலில்
துயர் துடைக்காது
போ’வென விரட்டும்
பொல்லாத சருகுகள்…

இவர்களை,
இரங்கலில்
மனங்கள் மாற
தவமிருக்கும்
புண்ணியங்கள்
இவர்கள்…

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks