பூச்செடி என நினைத்து வளர்த்த செடி வளர்ந்த பின் தான் முட்செடி எனத் தெரிந்தது. நான் வளர்த்த செடி என்பதற்காக வாசலில் வைத்து அழகு பார்த்தால் அது என்னையும் என்னை நாடி வருவோரையும் காயப்படுத்திவிடும். முட்செடியை அகற்ற வேண்டும் இன்றேல் யாரையும் காயப்படுத்தாதவாறு தூரமாக வைக்க வேண்டும். அது தானே புத்திசாலித்தனம்? தலையில் தூக்கி வைத்துக்கொண்டு குத்திவிட்டது என்றால் தவறு செடியுடையதா? தூக்கி வைத்துக் கொண்டாடியவருடையதா?
Subscribe
Please login to comment
0 கருத்துரைகள்
Oldest




























