29.2 C
Batticaloa
Friday, July 31, 2026

” தோட்டம் “

0
716

” உன்னில் கரைந்த நான்
என்னில் உன்னை
உணர்ந்தது என்ன?

மண்ணில் கலந்தது நீர்,
தன்னில் சிலிர்த்து
நனைந்ததென்ன வேர்?

புரிந்தது! காய்ந்தது வேர்,
பாய்ந்தது நீர்,

வேரானேன் நான்,
நீரானாய் நீ!

என்னே! என் சிந்தனை ஓட்டம்!
காரணம் உன் பார்வை,  அது
தரும் ஊட்டம்,

ஆசை மழையாகி உன் விழி
வழி போடும் நோட்டம்,

அதில்தான் தழைக்குது,
என் மனமென்னும்
பூந்தோட்டம்!”

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks