29.2 C
Batticaloa
Thursday, June 18, 2026
முகப்பு கவிதைகள் நிர்ப்பந்தம்

நிர்ப்பந்தம்

0
1392

தொலைதூர நடைபயணம்
தொடர்ந்தே வரும் நிழல்
பாதங்களிடையே சிக்கி
மிதிப்பட்டு வந்தாலும்
இணைந்தே வர சலிப்பதில்லை..
உறங்காமல் உள்ளமெனும்
ஆழ்கடல் தன்னில் புதையுண்டு
நினைவுகள் எனும் அலைகள்
கரைத்தொடுகையில் அவை
வலிகள் தர மறப்பதில்லை..
என் துடுக்குத்தனங்களும்
என்னை விட்டு தூரம் செல்கையில்
வண்ணம் தீட்டமுடியாத
உடைந்த தூரிகை என்றெழும்
உணர்வை மட்டும் தவிர்க்கமுடியவில்லை..
விடைகள் கிடைக்கப்போவதில்லை
என்றறிந்தும் கிடைத்தாலும்
நான் ஏற்கத்தயாரில்லை..
என்பது புரிந்தும் எதற்கு
என்னை சிலந்திவலை பின்னலினுள்
சிக்கவைக்க எத்தனிக்கும்
நிர்பந்த போராட்டம் தேவையில்லையே..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks