29.2 C
Batticaloa
Sunday, June 7, 2026
முகப்பு கவிதைகள் கனவிலும் உன் நினைவே

கனவிலும் உன் நினைவே

0
921

கடலோர மணலில் பெயரெழுதி
கைவிரல் சுருள்கேசம் கோதி
விடலையின் பருவம் விளையாடி
விழிமுன் நீயிருந்த காலங்கள்
பிடிக்கும் நிறத்தில் ஆடைகொண்டு
பிள்ளையார் கோயில் வந்தாய்
படிக்கும் பெருங்கதை மறந்து
பார்வைக்குள் உயிர் நெய்தாய்

மடிப்புக் குலையா வேட்டியோடு
மருதமர நிழல்மறைவில் நானிருந்து
அடிக்கடி விழிசாய்த்து அழைக்க
ஆகாதென்று அசைவில் சொன்னாய்
துடிக்கும் இதயத்தின் வேரறுத்து
தூரத்தே விலகியேன் சென்றாய்
நடிக்கும் காதலென்று நானறியேன்
நான்காணும் கனவுகள் நீநின்றாய்

படிக்கிறேன் பகலிரவாய் உன்கவி
பார்க்கும் திசைதோறும் உன்முகம்
துடிக்குமென் இதயத்தில் உன்பெயர்
தூக்கமில்லாக் கனவிலும் துளிர்க்கிறாய்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks