29.2 C
Batticaloa
Sunday, June 14, 2026

பௌர்ணமி

0
1067

ஆயிரமாயிரம் பௌர்ணமிகள்
தாண்டிச் சென்றாலென்ன
நீயில்லாத என் வானில்
என்றென்றும் அமாவாசை தான்…
தேய்பிறையாய்த் தேய்ந்து
காணமலே போய்விடுவாய்
என்றறியாது வளர்பிறைக்
கனவுகள் வளர்த்தேன்…
நிலா வந்து போனதற்கு
வான்வெளியில் சாட்சியில்லை
ஆனாலும் நீ வந்த சுவடுகள்
நீங்கவில்லை நெஞ்சத்திலே…
பூத்த அல்லி சான்றுரைக்கும்
கண்ணாளன் வருகையை
கேட்கவில்லை உன் காதில் மட்டும்
என் இதய மலரின் விசும்பல்கள்…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks