குறிச்சொல்: Haseetha
மெளனத்தின் சிகரம்
மழை மேகத்தைச் சுமந்தும்மண்டியிடா வானம் போல,விழி வழிக் கண்ணீரைபுன்னகையால் துடைத்துநிமிர்ந்து நிற்கிறாள் இவள்!
வலிகள் இவளிடம் தஞ்சம் புகுந்தும்பாறையென உறுதி கொள்கிறாள்...சிதறி ஓடும் மேகங்களைப் போலவாழ்க்கை சிதைக்கப் பார்த்தாலும்,சிகரமாய் தன் கௌரவம் காக்கிறாள்!
அவளது...
சிறகுகளின் சிறைவாசம்
நீ திறந்து வைத்திருப்பதுஜன்னலை மட்டுமல்ல...நம் நேசத்தின் கதவுகளையும் தான்!பறக்கவிட்டேன் என்றுநீ ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்...ஆனால், உன் விரல் நுனி பிடித்துப் பழகிய எனக்குசிறகுகள் இருப்பதே மறந்து போனதே!
தனித்துப் பறக்கும் சுதந்திரத்தை விட,உன்னோடு சேர்ந்து...
இடம் தவறி வைக்கப்பட்ட குவளை
அழகிய வண்ணத்துடன் வனையப்பட்டஓர் அபூர்வப் பளிங்குக் குவளை அது...அமிர்தத்தை ஏந்துவதும்,தாகம் தீர்ப்பதும் தான்அதன் ஆயுள் விதியென எழுதப்பட்டது...
வண்ண மலர்வனம் சூழ்ந்த வரவேற்பறையின் நடுவேமதிப்போடு வீற்றிருக்க வேண்டியதுதிசைமாறிப் போன ஏதோ ஒரு கணத்தில்...
புகை படிந்த...
விடியும் ஒரு நாள்
நிச்சயம் விடியும்வாழ்க்கை சில நேரங்களில்இருண்ட குகையைப்போலத் தோன்றலாம்...
வழி தெரியாத காடு போலமனம் அலைபாயலாம்கண்ணீர் கன்னத்தை நனைக்கும் போதுஇறைவன் உங்களைக் கைவிட்டு விட்டதாகஎண்ணிவிடாதீர்கள்...
மேகங்கள் கலைந்தால் ஒழியவானம் தெரிவதில்லை!உள்ளே பூட்டி வைத்திருக்கும் வலியும்,யாரும் அறியாத உங்கள்...
கருவறை
இரு உயிர் சேர்ந்த
அந்நியோன்னியத்தில்
இன்னோர் உயிர்
உதிக்கின்றது தாயின்
கர்ப்பத்தில்...
தாயினதும் தந்தையினதும்
முகங்களை பார்த்திட
ஆவலோடு காத்திருக்கின்றது
தசைநார்த் தொட்டிலிலே
அமைதியாக...
தாயின் தனிமையை போக்க
அவளின் கவலையை போக்க
அவளுக்கு ஆறுதலாய் இருக்க
அவளுக்கு துணையாயும் இருக்க
அவள் மணிவயிற்றில் உதைக்கின்றது...
ஆசுவாசமாய் பேசிட
அவள் - வயிற்றை தடவிட
அம்மா நான்...
மெளனியின் காதல்
மெளனியாக பிறந்திருக்கலாம்
மெளன மொழி போதுமே
நீ வேறு நான் வேறு எனும்
பேதம் இருவருக்கும் இல்லை
பேசிக் கொள்ளும் காதலை விட
மெளனியின் காதல்
ஏனோ அத்தனை
அழகாய் தெரிந்தது...
வாய் மொழி போர் இல்லை
வார்த்தைகளுக்கு அர்த்தமும் இல்லை
இருவரும் ஒரு வழி
இருவருக்கும் ஒரே...
பற்றுள்ளம் கொண்டவள்
தூரத்து மலை உச்சியில்
ஏதோ கொஞ்சம்
புள்ளியாய் வெளிச்சம்
தெரிகிறது அவளுக்கு...
அந்த வெளிச்சத்தை
தொட்டுவிட வேண்டும்
எனும் ஆசை
அவளுக்கும் வந்து விட்டது...
வெளிச்சத்தை நோக்கி
நடந்து சென்றாள்
ஓடிச் சென்றாள்
எப்படியாவது தொட்டு
விட வேண்டும்
எனும் அவாவில்...
புள்ளி அளவு வெளிச்சம்
பெரிதாகத் தெரிகிறது
ஆனந்தம் கொண்டாள்
கைகளை நீட்டினாள்
ஆனாலும் அவளால்
தொட முடியவில்லை...
திரும்பிப்...
நிசப்தம் குடிகொண்ட இரா
நடுநிசியில் ஏதோ
ஓர் தனிமை
ஊரே அடங்கி
ஓய்ந்து விட்ட நேரம்
தூரத்தில் கடல்
இரையும் ஓசை
கேட்டது...
வெளியிலே காற்றின்
தீண்டலினால்
தென்னங்கீற்றுகள்
ஒன்றோடு ஒன்று
உராய்ந்து கொள்ளும்
சலசலப்பு சத்தம்
காதில் ஒலித்தது...
தென்னை மரத்தில்
இருந்த பூக்கள்
விடுதலை பெற்றுக்கொண்டு
கீழ் நோக்கி வருகையில்
முற்றத்து கூரையில் பட்டு
ஒலி எழுப்பியது...
தெருநாய்கள் உறுமிக் கொண்டும்
ஒன்றை ஒன்று...
எழுதித் தீராப் பக்கங்கள்
பக்கம் 02
காலம் காலில் சக்கரம் கட்டியது போல கண்டபடி சுழல ஆரம்பித்து நாட்கள் ஓடத் தொடங்கின.
ஆயிஷா அவளது நண்பர்களுடன் குழுமி இருக்கும் போது தமிழாசிரியை மொனிட்டர் என்றவாறு உள்ளே நுழைந்தார். ஆசிரியையின் அழைப்பு...
எழுதித் தீராப் பக்கங்கள்
பக்கம் 01
ஈழத்தின் மொத்த இயற்கை அழகையும் ஓரிடத்தில் ஒன்று சேர்த்தது போல ஜொலித்துக் கொண்டிருந்தது மதுரபுரம்.
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை போன்ற ஐவகை நிலத்தையும் ஆக்கிரமித்து இருந்தது. கரையோரத்தில் நின்று பார்த்தால் கண் பார்க்கும் தூரம் வரை...


































