29.2 C
Batticaloa
Saturday, June 20, 2026
முகப்பு கவிதைகள் உறவு பற்றுள்ளம் கொண்டவள்

பற்றுள்ளம் கொண்டவள்

0
554
compressed_image_50kb

தூரத்து மலை உச்சியில்

ஏதோ கொஞ்சம்

புள்ளியாய் வெளிச்சம்

தெரிகிறது அவளுக்கு…

அந்த வெளிச்சத்தை

தொட்டுவிட வேண்டும்

எனும் ஆசை

அவளுக்கும் வந்து விட்டது…

வெளிச்சத்தை நோக்கி

நடந்து சென்றாள்

ஓடிச் சென்றாள்

எப்படியாவது தொட்டு

விட வேண்டும்

எனும் அவாவில்…

புள்ளி அளவு வெளிச்சம்

பெரிதாகத் தெரிகிறது

ஆனந்தம் கொண்டாள்

கைகளை நீட்டினாள்

ஆனாலும் அவளால்

தொட முடியவில்லை…

திரும்பிப் பார்த்தாள்

காலில் பூட்டப்பட்டு

இருந்தது நீண்ட

சங்கிலி வடிவில்…

உறவென…

குடும்பமென…

சமூகமென…

அத்தனையும் தடைகள்…

சங்கிலி இழுக்கப்பட்டது

வீழ்ந்தாள் மண்ணில்

ஆனாலும் அவாவை

அவள் விடவில்லை…

தொட்டுவிட வேண்டும்

என்றே இலட்சியம் பூண்டாள்

பார்த்துக் கொண்டே இருக்கிறாள்-அப்புள்ளி

அளவு வெளிச்சத்தை…

சங்கிலி தகர்க்கப்படும்

விலங்கு உடைக்கப்படும்

அந்நாளில் தொடுவாள்

ஆசை தீர வெளிச்சத்தை…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks