29.2 C
Batticaloa
Saturday, April 19, 2025
முகப்பு குறிச்சொற்கள் Tamil poem competition

குறிச்சொல்: Tamil poem competition

பாடசாலை வாழ்க்கை

2
சின்னஞ்சிறு பருவமதில் சித்திரம் பேசுதடி உடன் பிறவா உறவுகளை பாடசாலை தனில் சந்தித்தோம் சின்னச்சின்னக் குறும்புகளை சிக்காமல் செய்திடுவோம் ஆசானை வணங்கிட்டே அறிவுக் கடலில் நாம் மிதப்போம் முதல் நட்பு உருவாகிய காலமது எம்மை அறியா ஆனந்தத்தில் வாழ்ந்த காலமது இறைவன் கொடுத்த அழகிய காலமது இறையடி சேரும்...

சூழ்நிலை

0
உயர்ந்து நிற்கும் வானமதில் ஓடும் மேகத்திலும் சோகம் உண்மையான உறவுகளின் இதயத்திலும் சோகம் வீசும் தென்றலிலும் சோகம் விண்மீன் கூட்டத்திலும் சோகம் மனிதன் அறிவின் மூடனாய் ஆனதும் மனிதன் அறிவின் அறிவாய் ஆனதும் இவ் யுகமே! காரணம் யாது எனின் மூடன் அறிவாளி என்று யுத்தத்தினை...

அறுவடைக்கு நானெங்கே கதிரறுப்பேன்?

சினமுற்ற சூரியன் கருவுற்று செம்பாலை யொன்றைப் பிரசவிக்க அக்னித் தென்றல் வீசுதடி ஏர்பிடித்து நானெங்கே நிலமுழுவுவேன் சூட்டிலே வயல்மேனி வெடித்து வியர்வைக் குருதி கசிய நிலமடியில் துமிகூட இல்லையடி சேனைக்கு நானெங்கே நீர்பாய்ச்சுவேன் விதைநெல் முளை முடங்கி விதைக்குள்ளே மலடியாக வேறெவளோ உண்டானால் அறுவடைக்கு நானெங்கே கதிரறுப்பேன் அனலெல்லாம் சுகத்...

கடைவிழி கஜாபுயலு

கோடையில பூமிக்கு போர்வதான்டி உன்நிழலு! சாடையில இனிக்குதடி உன்கழுத்து தேன்குழலு! தென்றலுக்கு உன்கூந்தல் பூமணக்கும் கார்குழலு! வண்டுகளுக்கு உன்மேனி தேன்சுரக்கும் பாற்கடலு! நாதித்திக்கும் முத்தத்திற்கு நல்சுவை தேனிதழு! தலசுத்தவைக்கும் பித்தத்திற்கு நிவாரணி உன்விரலு! புருவமிரண்டும் கூத்தாடும் மழைத்தோகை மயிலு! மேகமிருண்டு வான்மூடும் இனியுமடிக்காது வெயிலு! போதையின்றி மயக்கும் விழிச்சாயம் கருங்குயிலு! புன்சிரிப்பால் பொசுக்கும் பூலோகப் பூந்தயலு! திட்டமிட்டு சிக்கவைக்கும் கடைவிழி கஜாபுயலு! வட்டமிட்டு என்னமட்டும் பம்பரமாய்...

ஒரு துளிக் கண்ணீர்

0
அன்பு கொண்டு அடிமையாகி அடிமனம் வேதனைப்படுகையிலே ஆறுதல் தேடி நிற்க ஆதரிப்பார் யாருமில்லை எம்மனம் தேற்றவென்று எமக்களித்த பரிசே ஒரு துளிக் கண்ணீர் பித்தலாட்டக் காதலிலே பிரிவுதான் வருகையிலே துன்பம் நேர்கையிலே துயரத்தில் ஆழ்கையிலே தீராத சோகத்தையும் தீர்த்திடுமே ஒரு துளிக் கண்ணீர் தனித்து நாம் நிற்கையிலே தனிமை உணர்கையிலே தலையணைக்கு வாயிருந்தால் தயங்காமல்...

அறிவகமே நூலகம்

அழிவடையும் உலகில் அனைத்துமே அழிந்து தூளாகும் அழிந்த பின்னும் வாழ்ந்தவர்களின் அத்தாட்சி நூலாகும்! அறிவுடைமை இல்லையேல் அறிவீனத் தலையோங்கும் அறிவீனர் தலைதாங்கும் ஆட்சியும் குடைசாயும்! கற்பவை எள்ளளவாயினும் காலத்திற்கு உதவிடுமே! கல்லாத எள்ளாளனாயினும் கல்வெட்டும் உதரிடுமே! தேடிக் கற்கும் கல்விதான் நெஞ்சில் கூடிக் குடிகொள்ளும் நாடிச் சென்று கற்றாலே நமது தலைவிதியும் வெல்லும் அறிவகமே நூலகம்! அதை...

மதியின் கலங்கம்

0
நேரம் ஓடியது வானும் மங்கியது தன்னை யாரும் ரசிக்கவில்லை என கோபம் கொள்ளவில்லை தன் அழகை மறைக்கவில்லை வயதும் தேய்ந்து கொண்டே இளமை எட்டிப்பார்த்தது இளம் மாதும் அதன் அழகை கண்டு வியந்து வானம் பார்த்தாள் நிலவின் ஒளியில் அதன் கலங்கம் மறைந்து தெளிந்த அழகு நிலவு முகிலின் நடுவே ஏறிப்பார்த்தது ரசிக்கும் உள்ளத்திற்கு நிலவின்...

எதிர்பார்ப்பு…

0
என் மனதில் என்றும்நீயே உள்ளாய்எப்போது நீ என்னைதேடி வாராய் நம் கரம் கோர்த்துஎன்றும் ஒன்றாய் நடப்போம்நீ தான் என் வாழ்க்கையடிநம் கனவிலேஇதயங்கள் சேர்ந்திடவிடிந்த பின்நீ என்னை விட்டுப் பிரிய துயரத்தின் போதுஉன்னை நான் எந்தன்இதய துடிப்பாக...

ஒரு மௌனம் சபித்தால்…

விறகாகிப் போன மரத்தை வட்டமிட்டுத் தேன் தேடும் வண்டாய் காலக் கடத்தல்கள் தேவைதானா? இதயத்தை வளைக்கும் இருள் முடிச்சான தேவையற்ற உங்கள் நலன் விசாரிப்புக்களை விரல்களால் அவிழ்ந்து விட்டு, காத்திருந்து எனை வசைபாடுதலும் நியாயம் தானா? என் வீட்டு முற்றத்தில் நட்சத்திரப் புள்ளிமான் விளையாடும் போது, கானகத்து நரிகளோடு காலக் கழிப்பெதற்கு ? என் சொற்கள் அக்னியை உரிமைகொள்ளும் விசமங்களை சேகரிக்காதே, தொலைவில்...

தேடல்

அறிவின் தேடல் புலமை சேர்க்கும்அன்பின் தேடல் உறவை வளர்க்கும்வாழ்வில் தேடல் உள்ள வரைக்கும்வாழ்க்கை ஆசைக் காடு வளர்க்கும் தேடல் வாழ்வில் உள்ள வரைக்கும்தேவை நெஞ்சில் தேங்கிக் கிடக்கும்தேடல் அறிவின் தேவை பெருக்கும்தேர்வில் நல்ல திறனைச்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks