29.2 C
Batticaloa
Monday, July 20, 2026

கனவு…..

0
1173
unnamed

வெயில் காலத்திலுள்ள
கானல் நீரை போல
ஏமாற்றிச் செல்லவா
வந்தாய் என் துயிலில்
ஏமாற்ற வந்தாலும்
என் இரவில்
பல சந்தோஷம்
தந்தாய் என் மனதில்
என் இமைகளை
மூடிய பின்
நுழைந்தாய் என்
அறைக்குள் அனுமதியின்றி
மறு இமை
திறக்க முன்
சிதறிச் சென்றாய்
எவ்வித நனவுமின்றி
கண்டேன் பல இன்பங்களை
ரசித்தேன்
வாழ்வின் சுகங்களை
ஏனோ அறியாமல் இருந்தேன்
இவை யாவும்
நிலவுடன் சென்று
மறைந்துவிடுமென்று…..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks