29.2 C
Batticaloa
Tuesday, April 28, 2026

இரவு நதி

0
966
f917efbed6d04a12ef5fd65196bd0ab1

அன்று ஒரு இராப்பொழுது
வட்ட நிலா
சொட்டச் சொட்ட கொட்டுதம்மா
பால் மழையை ஆடைக் கட்டிக்கொள்ள
அவள் வெள்ளொளியை
பெற்று வரும் நதிமகளே……!

சிற்றிடை மேனியினை
தொட்டுவிட்டாய் வளைவுகளில்
நாதம் சிந்தச் சிந்த
சிதறிக்கொண்டே செல்பவளே….
செந்தமிழே…!


கரை மீதினில் நானொருவள் – உனைக்
காண விளைவதும் நோக்காது
புனல் ஓடி ஓடி
போதல் எல்லாம் -அவன்
ஆழி முகம் தேடித்தானோ

நன்னிலத்து தண் குடமே – நின்
நர்த்தனம் கண்டு
நானலும் நாணத்தில் நாணுதடீ

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks